Saturday, October 7, 2017

ஆத்திசூடி

ஆத்திசூடி

ஔவையார் ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்
Let's Spread Avvaiyaar Aathisoodi to the World

நூல் ஆசிரியர்: ஔவையார்
பாடல்கள்: 109
இலக்கணம்: காப்புச் செய்யுள் -1

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.

ஆத்திச்சூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திச்சூடி.

தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திச் சூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

The Āathichoodi (Tamil: ஆத்திசூடி)  is a collection of single-line quotations written by Avvaiyar and organized in alphabetical order. There are 109 of these sacred lines which include "Intend to do right deeds", "Never degrade learning", "Don't exaggerate what you saw", "Don't forget gratitude" and many other insightful quotes expressed in simple words. It teaches good habits,discipline and good works for all.

=============================
உயிர் வருக்கம்
=============================

1. அறம் செய விரும்பு
தருமம் செய்ய நீ விரும்புவாயாக
Learn to love virtue

2. ஆறுவது சினம்
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்
Control anger

3. இயல்வது கரவேல்
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு
Don't forget Charity

4. ஈவது விலக்கேல்
ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
Don't prevent philanthropy

5. உடையது விளம்பேல்
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே
Don't betray confidence.

6. ஊக்கமது கைவிடேல்
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது
Don't forsake motivation

7. எண் எழுத்து இகழேல்
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே
Don't despise learning

8. ஏற்பது இகழ்ச்சி
இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது
Don't freeload

9. ஐயம் இட்டு உண்
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்
Feed the hungry and then feast

10. ஒப்புரவு ஒழுகு
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்
Emulate the great

11. ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு
Discern the good and learn

12. ஒளவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே
Speak no envy

13. அஃகஞ் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே
Don't shortchange

=============================
உயிர்மெய் வருக்கம்
=============================

14. கண்டொன்று சொல்லேல்
கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே
Don't flip-flop.

15. ஙப் போல் வளை
'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ.
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
"ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
Bend to befriend

16. சனி நீராடு
சனி(குளிர்ந்த) நீராடு
Shower regularly

17. ஞயம்பட உரை
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு
Sweeten your speech

18. இடம்பட வீடு எடேல்
உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே
Judiciously space your home

19. இணக்கம் அறிந்து இணங்கு
ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்
Befriend the best

20. தந்தை தாய்ப் பேண்
உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று
Protect your parents

21. நன்றி மறவேல்
ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே
Don't forget gratitude

22. பருவத்தே பயிர் செய்
எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்
Husbandry has its season

23. மண் பறித்து உண்ணேல்
பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)
Don't land-grab

24. இயல்பு அலாதன செய்யேல்
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே
Desist demeaning deeds

25. அரவம் ஆட்டேல்
பாம்புகளை பிடித்து விளையாடாதே
Don't play with snakes

26. இலவம் பஞ்சில் துயில்
'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு
Cotton bed better for comfort

27. வஞ்சகம் பேசேல்
கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே
Don't sugar-coat words

28. அழகு அலாதன செய்யேல்
இழிவான செயல்களை செய்யாதே
Detest the disorderly

29. இளமையில் கல்
இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்
Learn when young

30. அரனை மறவேல்
கடவுளை (அறன் = சிவபெருமானை) மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்
Cherish charity

31. அனந்தல் ஆடேல்
மிகுதியாக தூங்காதே
Over sleeping is obnoxious

==============================
ககர வருக்கம்
==============================

32. கடிவது மற
யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே
Constant anger is corrosive

33. காப்பது விரதம்
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்
Saving lives superior to fasting

34. கிழமைப்பட வாழ்
உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்
Make wealth beneficial

35. கீழ்மை அகற்று
இழிவான குணஞ் செயல்களை நீக்கு
Distance from the wicked

36. குணமது கைவிடேல்
நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்)
Keep all that are useful

37. கூடிப் பிரியேல்
நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே
Don't forsake friends

38. கெடுப்பது ஒழி
பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே
Abandon animosity

39. கேள்வி முயல்
கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்
Learn from the learned

40. கைவினை கரவேல்
உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்
Don't hide knowledge

41. கொள்ளை விரும்பேல்
பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே
Don't swindle

42. கோதாட்டு ஒழி
குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)
Ban all illegal games

43. கெளவை அகற்று
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு
Don't vilify

===========================
சகர வருக்கம்
===========================

44. சக்கர நெறி நில்
தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர்)
Honor your Lands Constitution

45. சான்றோர் இனத்து இரு
அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு
Associate with the noble

46. சித்திரம் பேசேல்
பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே
Stop being paradoxical

47. சீர்மை மறவேல்
புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே
Remember to be righteous

48. சுளிக்கச் சொல்லேல்
கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
Don't hurt others feelings

49. சூது விரும்பேல்
ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே
Don't gamble

50. செய்வன திருந்தச் செய்
செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்
Action with perfection

51. சேரிடம் அறிந்து சேர்
நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
Seek out good friends

52. சையெனத் திரியேல்
பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
Avoid being insulted

53. சொற் சோர்வு படேல்
பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
Don't show fatigue in conversation

54. சோம்பித் திரியேல்
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே
Don't be a lazybones

==========================
தகர வருக்கம்
==========================

55. தக்கோன் எனத் திரி
பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்
Be trustworthy

56. தானமது விரும்பு
யாசிப்பவர்களுக்கு தானம் செய்
Be kind to the unfortunate

57. திருமாலுக்கு அடிமை செய்
நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்
Serve the protector

58. தீவினை அகற்று
பாவச் செயல்களைச் செய்யாமல் இரு
Don't sin

59. துன்பத்திற்கு இடம் கொடேல்
முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே
Don't attract suffering

60. தூக்கி வினை செய்
ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்
Deliberate every action

61. தெய்வம் இகழேல்
கடவுளை பழிக்காதே
Don't defame the divine

62. தேசத்தோடு ஒட்டி வாழ்
உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்
Live in unison with your countrymen

63. தையல் சொல் கேளேல்
மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே
Don't listen to the designing

64. தொன்மை மறவேல்
பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை  விட்டு கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்)
Don't forget your past glory

65. தோற்பன தொடரேல்
ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.
Don't compete if sure of defeat

============================
நகர வருக்கம்
============================

66. நன்மை கடைப்பிடி
நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்
Adhere to the beneficial

67. நாடு ஒப்பன செய்
நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்
Do nationally agreeables

68. நிலையில் பிரியேல்
உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே
Don't depart from good standing

69. நீர் விளையாடேல்
வெள்ளபெருக்கில்  நீந்தி விளையாடாதே
Don't jump into a watery grave

70. நுண்மை நுகரேல்
நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே
Don't over snack

71. நூல் பல கல்
அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி
Read variety of materials

72. நெற்பயிர் விளைவு செய்
நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்
Grow your own staple

73. நேர்பட ஒழுகு
ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட
Exhibit good manners always

74. நைவினை நணுகேல்
பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே
Don't involve in destruction

75. நொய்ய உரையேல்
பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே
Don't dabble in sleaze

76. நோய்க்கு இடம் கொடேல்
மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே
Avoid unhealthy lifestyle

===========================
பகர வருக்கம்
===========================

77. பழிப்பன பகரேல்
பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே
Speak no vulgarity

78. பாம்பொடு பழகேல்
பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே
Keep away from the vicious

79. பிழைபடச் சொல்லேல்
குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே
Watch out for self incrimination

80. பீடு பெற நில்
பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்
Follow path of honor

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்
Protect your benefactor

82. பூமி திருத்தி உண்
விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண் (அ) விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்
Cultivate the land and feed

83. பெரியாரைத் துணைக் கொள்
அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்
Seek help from the old and wise

84. பேதைமை அகற்று
அறியாமையைப் போக்கு
Eradicate ignorance

85. பையலோடு இணங்கேல்
அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே
Don't comply with idiots

86. பொருள்தனைப் போற்றி வாழ்
பொருள்களை (செல்வம் உட்பட) வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்
Protect and enhance your wealth

87. போர்த் தொழில் புரியேல்
யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே
Don't encourage war

=========================
மகர வருக்கம்
=========================

88. மனம் தடுமாறேல்
எதனாலும் மனக்கலக்கம் அடையாதே
Don't vacillate

89. மாற்றானுக்கு இடம் கொடேல்
பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே
Don't accommodate your enemy

90. மிகைபடச் சொல்லேல்
சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே
Don't over dramatize

91. மீதூண் விரும்பேல்
மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே
Don't be a glutton

92. முனைமுகத்து நில்லேல்
எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே
Don't join an unjust fight

93. மூர்க்கரோடு இணங்கேல்
மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே
Don't agree with the stubborn

94. மெல்லி நல்லாள் தோள்சேர்
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்
Stick with your exemplary wife

95. மேன்மக்கள் சொல் கேள்
நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட
Listen to men of quality

96. மை விழியார் மனை அகல்
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்
Dissociate from the jealous

97. மொழிவது அற மொழி
சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்
Speak with clarity

98. மோகத்தை முனி
நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு
Hate any desire for lust

==========================
வகர வருக்கம்
==========================

99. வல்லமை பேசேல்
உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே
Don't self praise

100. வாது முற்கூறேல்
பெரியோர்களிடத்தில் முறன் பட்டு வாதிடாதே
Don't gossip or spread rumor

101. வித்தை விரும்பு
கல்வியாகிய நற்பொருளை விரும்பு
Long to learn

102. வீடு பெற நில்
முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து
Work for a peaceful life

103. உத்தமனாய் இரு
உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்
Lead exemplary life

104. ஊருடன் கூடி வாழ்
ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்
Live amicably

105. வெட்டெனப் பேசேல்
யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே
Don't be harsh with words and deeds

106. வேண்டி வினை செயேல்
வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே
Don't premeditate harm

107. வைகறைத் துயில் எழு
நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு
Be an early-riser

108. ஒன்னாரைத் தேறேல்
பகைவர்களை நம்பாதே
Never join your enemy

109. ஓரம் சொல்லேல்
எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு
Be impartial in judgement

- ஔவையார் ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்
Let's Spread Avvaiyaar Aathisoodi to the World


Sources:





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...